பண்டிகை
நாள்
வந்ததே
பண்டிகை நாள் வந்ததே மகிழ்கொண்டாடுவோம்
உபவாச நாள்இதுவே ஆசரித்திடுவோம்
ஆனந்தமே ஆ..ஆ..ஆனந்தமே
பேரின்பமே ஓ..ஓ..பேரின்பமே
சீயோனில் எக்காளம் ஊதுவோம் - நம்
சபையை பரிசுத்தம் பண்ணுவோம்
முதியோர்-சிறியோர் வாலிபர் யாவரும்
ஓன்றாக கூடிடுவோம் - அல்லேலுயா
முன்மாரி மழையின்று பெய்யுமே
பின்மாரி வருஷிக்கப் பண்ணுவார்
தானியம்-நிரம்பும் எண்ணை வழிந்தோடும்
திருப்தியாக்குவாரே நம்மை
ஆவியை நம்மேலே ஊற்றுவார்
அபிஷேகம் பொங்கி வழியுமே
மேய்ச்சல்-உண்டாகும் விருட்சம் காய்த்திடும்
திரும்பதருவாரே - உன்பலனை
பயப்படாதே எந்தன் தேசமே-கர்த்தர்
பெரியகாரியம் செய்வாரே
வைராக்கியம்-கொண்டு உனனை கடாட்சித்து
ஆசிர்வதிப்பாரே நம்தேசத்தை