பண்டிகை நாள் வந்ததே

 

பண்டிகை நாள் வந்ததே மகிழ்கொண்டாடுவோம்

உபவாச நாள்இதுவே ஆசரித்திடுவோம்

 

ஆனந்தமே ....ஆனந்தமே

பேரின்பமே ....பேரின்பமே

 

சீயோனில் எக்காளம் ஊதுவோம் - நம்

சபையை பரிசுத்தம் பண்ணுவோம்

முதியோர்-சிறியோர் வாலிபர் யாவரும்

ஓன்றாக கூடிடுவோம் - அல்லேலுயா

 

முன்மாரி மழையின்று பெய்யுமே

பின்மாரி வருஷிக்கப் பண்ணுவார்

தானியம்-நிரம்பும் எண்ணை வழிந்தோடும்

திருப்தியாக்குவாரே நம்மை

 

ஆவியை நம்மேலே ஊற்றுவார்

அபிஷேகம் பொங்கி வழியுமே

மேய்ச்சல்-உண்டாகும் விருட்சம் காய்த்திடும்

திரும்பதருவாரே - உன்பலனை

 

பயப்படாதே எந்தன் தேசமே-கர்த்தர்

பெரியகாரியம் செய்வாரே

வைராக்கியம்-கொண்டு உனனை கடாட்சித்து

ஆசிர்வதிப்பாரே நம்தேசத்தை